போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள்..!!

களுத்துறை பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றன.குறித்த பாடசாலைகளை களுத்துறை களுத்துறை புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான‌ பாடசாலைகளும் அடங்கும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் நற்பெயருக்குக் தீங்கு ஏற்படுத்துவதாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பாடசாலை சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற விசேட விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தி உள்ளதாகவும் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.