பணி இடமாற்றம் காரணமாக அரச ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்.!!

யாழில் பணி மாறுதல் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் இளம் அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான தீர்மானம் எடுத்து இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா எனும் அர ஊழியரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய நிலையில் குறித்த பெண்ணிற்கு பணி இடமாற்றம் கிடைத்துள்ளது இடமாற்றத்தை இரத்து செய்ய முயற்சித்த போதிலும் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11)  அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *