கடலிற்கு குளிக்கச்சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு..!!

நேற்று (16/02/2024)மாளிகைக்காடு – சாய்ந்தமருது எல்லை வீதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் ஜும்மா தொழுகையை முடித்துக் கொண்டு நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.அவர்களில் இருவர் மாலை 4.20 மணியளவில் விளையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக‌ ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரு மாணவர்களை தேடும் பணியில் மீனவர்களும் பொதுமக்களும் தேடுதலை முன்னடுத்துவந்தனர்.அந்த வகையில் மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *