வவுனியா பாவற்குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு..!

அடையாளம் தெரியாத யுவதி ஒருவரின் சடலத்தை வவுனியா பாவகுளத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று வியாழக்கிழமை (21) மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற யுவதி ஒருவரே குளத்தில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.எனினும் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் 18 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *