தன் பிள்ளையை தானே சீரழித்த தந்தை ..! மருத்துவரிடம் சென்றதால் சிக்கிய தந்தை..

தனது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெயங்கொடை, பலபோவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வீட்டிற்கு ஒரே மகளான 9 வயது சிறுமியே இவ்வாறு தந்தையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கைதான சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, தனது தந்தை தாயுடன் ஒரே அறையில் ஒரே படுக்கையில் உறங்குவது தெரிய வந்தது.இந்த சமயத்தில் சிறுமி தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியபோதும்,. கணவனின் மிரட்டலுக்கு அஞ்சி தாயார், அதனை வெளியில் சொல்லாது இருந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் சிறுமியின் கல்வியில் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதற்கான காரணத்தை அறிய தாய், சிறுமியை மருத்துவரிடம் பரிந்துரைத்த போது, ​​சிறுமி நடந்த சம்பவத்தை மருத்துவரிடம் கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் வைத்தியர் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகப்வும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *