ஒரு சில கர்ப்பிணி பெண் கும்பலால் ஏற்படும் அச்சம்..!! மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-1-22.jpg)
பேரூந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கிய கும்பல் ஒன்று பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20, 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பேருந்தில் இருந்த ஒருவர் தனது நகைகளை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேருந்தை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த பெண்கள் கும்பல் நாடு முழுவதும் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.