பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடுமை..!! சினிமாவில் நடை பெறுவது போல் கைதான இளைஞன்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-8.jpg)
29 வயதுடைய இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் பாடசாலை மாணவி ஒருவரை காதல் வலையில் விழுத்தி துஷ்பிரயோகம் செய்ததற்காக பொலிஸாரால் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவமானது இன்று திங்கட்கிழமை ( 01) நடைபெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்.பண்டாரவளை கினிகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி அவரை கொழும்பில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று சில நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் இரண்டு வாரங்களாக , பெண் பொலிஸ் அதிகாரி தனக்கு வேலை ஒன்று தேடித்தருவதாக கோரியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபர், வெலிமடை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருவதாகவும் , அப்போது பண்டாரவளையில் சந்தித்து , கொழும்புக்கு செல்வோம் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸ் பெண் அதிகாரியிடம் இடத்தை மாற்றி பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.அதன்படி, பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இரு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர் .