இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..!! காப்பற்றப்பட்ட உயிர்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-2-24.jpg)
நேற்று இரவு பெண் ஒருவர் மஹியங்கனை – கண்டி வீதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே வெரகங்தொட்ட மகாவலி பாலத்தில் இருந்து தனது உயிரை மாய்க்கும் என்னத்தில் குதித்துள்ளார்.குறித்த சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் குழு ஒன்று உடனடியாக குறித்த பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பெண் ஒருவர் நேற்று இரவு 7.00 மணியளவில், மகாவலி ஆற்றில் குதிப்பதற்காக பாலத்தின் கொங்கிரீட் வேலியின் மீது ஏறிச் சென்றதை அவதானித்த இளைஞர்கள் அவரைப் பிடிக்க ஓடியபோது, அப்பெண் பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
குதித்த பெண் பாலத்திற்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.மஹியங்கனை பொலிஸார், பாலத்திற்கு அருகில் குறித்த பெண்ணின் மோட்டார் சைக்கிளில் அவரது தொலைபேசியை கண்டெடுத்துள்ளனர்.கண்டெடுக்கப்பட்ட கைத்தொலைபேசியில் அவரது பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.பாலத்தில் இருந்து குதித்த பெண் மினிபே பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணின் ஒரு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.