வரி உயர்வு காரணமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்..!!

நாடு முழுவதும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் VAT வரியை 18 சதவீதமாக உயர்த்தியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆரம்பக் கட்டமாக எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொது மக்கள், சிவில் அமைப்புக்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.