பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை..!! காரணம் மூட நம்பிக்கையா..?
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-2-11.jpg)
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை – வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் (13.04.2024) அன்று உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆசிரியர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில், அவருக்கு பில்லி சூனியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவரது தந்தையும் மேற்படி ஆசிரியரும் இளவாலை இளவாலை முள்ளானையில் உள்ள ஆலயமொன்றில் கடந்த 5ஆம் திகதி முதல் தங்கி சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இவருக்கு நேற்றுமுன்தினம் வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி (13.04.2024) அவர் உயிரிழந்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜெயபாலசிங்கம் அவரது மரண விசாரணைகளை மேற்கொண்டார்.மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடலத்தை புதைக்குமாறு கூறி, உடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.