இவரை அடையாளம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்..!! யாழ்ப்பாண பொலிஸார் கோரிக்கை..!

வயோதிபர் ஒருவர் அடிக்கடி துவிச்சக்கரவண்டிகளை திருடிவருவதால் அவரை பிடிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளனர்.குறித்த முதியவர் யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் தனது கைவரிசையைக் காட்டி துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த வகையில் நேற்று தெல்லிப்பழை பகுதியில் முதியவர் துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *