குழந்தைகளுக்கான த‌டுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.6 முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், எதிர்வரும் 6 திகதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, 6 முதல் 9 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவவுறுத்தியுள்ளது.

மேலும் அம்மை நோயாளர்கள் அதிகம் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *