தொழிற்பயிற்சித் திட்டம் இன்று முதல் ஆரம்பம்..!!உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அறிவிப்பு..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-3-3.jpg)
கல்வி அமைச்சு இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கூறியுள்ளது. குறித்த பயிற்சி திட்டம் நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும்.இதற்கிடையில், உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.