கைத் தொலைபேசியால் அரங்கேறிய கொலை சம்பவம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

வாழைச்சேனை பகுதியில் மொபைல் சண்டையால் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளது.43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பு-Seller (Female)

Chemical Distributors விற்பனையாளர்- Seller (Female) தங்குமிட வசதி உண்டு Salary : 30000 – 35000 Location : Nallur Brown Road, Jaffna. Contact : +(94)76 293 1807

லைட்டா குனிஞ்சா எல்லாம் தெரிஞ்சிரும்..!!உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை வேதிகா..!

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் சில பிரபலமான‌ நடிகைகள் உள்ளார்கள். ஜெனிலியா, வேதிகா எல்லாம் அந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள். ஜெனிலியா திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.ஆனால் வேதிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். வேதிகா தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் கியூட் நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். […]

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள முக்கிய தகவல் !!

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஆசிரியர் சேவைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தெரிவுச் செயற்பாடுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த‌ நிலையில்,அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 மார்ச் 23ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், நடைபெறவிருந்த போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டது.இந்த மனுக்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், […]

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி உயிரை விட்ட குடும்பஸ்தர்..!!

சிலர் பந்தயம் கட்டி மற்றும் பகடைகாய் விளையாடியதால், கொழும்பு – கொட்டாவை ருக்மலே பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதேவேளை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் நீர் நிரம்பிய குவாரியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் இரவு (18) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஹோமாகம நகரின் சீமா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தரப்பினர் பணத்திற்காக பகடைக்காய் ஆடிக்கொண்டிருந்தபோது, ​​திடீரென அந்த […]

மரணத்திற்கு யார் காரணம்..? வவுனியாவில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 17ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்கப்பட்டது.இந்நிலையில் நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். […]

ஹீரோவாக மாறிய 16 வயது சிறுவன்..!! குவியும் பாராட்டுக்கள்..!

தங்க நகைகளை திருடி மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவன் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.குறித்த சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த திருடர்கள் மீது 16 வயது சிறுவன் துணிச்சலா சைக்கிளை வீசியதால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் அவர்களிடம் இரண்டு தங்கச் சங்கிலிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் […]

மர்மமான முறையில் கர்ப்பமான 13 வயது சிறுமி..!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

ஹெட்டிபொல பகுதியில் 13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமடைந்த சம்பவம் வைத்தியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இது குறித்து நேற்றய தினம் பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.சிறுமி […]