10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை..!!மன்னாரில் பதற்றம்..!

நேற்று 15.02.2024 இரவு மன்னார் – தலைமன்னார் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 10 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நபரால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,சந்தேக நபரும் அவரது மனைவியும் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்ததுடன், கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் 10 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.இந்நிலையில், அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் மேற்படி தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *