தேயிலை பொதிகளை திருடிய பொலிஸார் கைது..!!

பொரலஸ்கமுவ பொலிஸாரால் பல்பொருள் அங்காடியில் இருந்து தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 14ம் தேதி காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக்கொண்ட இவர் வெரஹெர பிரதேசத்தில் உள்ள இந்த அலுவலகத்திற்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் இருந்து இரண்டு தேயிலை பொதிகளை திருடியுள்ளார். இதனையறிந்த இந்த பல்பொருள் அங்காடி ஊழியர்கள், பொலிஸ் சீருடையில் இருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்து பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சந்தேக நபர் திருடியதாக கூறப்படும் இரு தேயிலை பொதிகளின் பெறுமதியானது 2,240 ரூபாவாகும். கைது செய்யப்பட்டவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்ய கொழும்பு வடக்கு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *