30 வயது காதலனிற்க்காக போதைப் பொருளை தன்வசம் பாதுகாப்பாக வைத்திருந்த 17 வயது சிறுமி..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-9-2.jpg)
வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர்.விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தனது காதலனான இளைஞருக்காக போதைப்பொருளை பாதுகாப்பாக தன்வசம் வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த நிலையில், சந்தேகநபர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் பாவனைக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.