58 வயது நபரை தாக்கி கொன்ற பூசாரி..!

மட்டகளப்பு மாங்கேணி பிரதேசத்தில் அண்ணன் தங்கை இருவரையும் பூசாரி ஒருவர் தாக்கியுள்ளார்.குறித்த சம்பவத்தில் அண்ணன் உயிரிழந்ததாக தெரிய வருகிறது.

குறித்த பகுதியில் பேய், பிசாசு மற்றும் ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் கோயில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் காயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில், தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .அதேவேளை குறித்த பூசாரி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபருக்கும் பூசாரியின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததை அறிந்தே குறித்த பூசாரி தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவர் எனக் கூறப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *