யாழ்ப்பாணத்தில் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவிவிட்ட வெளிநாட்டு பெண்..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/01/accont-2-7.jpg)
யாழ்.நகரில் உள்ள பிரபல துணிக்கடைகள், கார்கள் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் கலவரக்காரர்கள் மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் நகரில் இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன இதன் காரணமாக 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.ஒரு கார் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் மூன்று முக்கிய சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெரியம்மா பெல்ஜியத்தில் வாழ்ந்து வருவதும், அவருக்கு தெரிந்தவர் ஒருவரின் தேவைக்கு அமைய, கூலிப்படையாக யாழ்ப்பாண ரௌடிகள் செயற்பட்டது தெரிய வந்தது.கடைகளை எரிக்க ரூ.12 லட்சமும், வாகனங்களை எரிக்க ரூ.7 லட்சமும் வழங்க பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
முதற்கட்டமாக ரூ.1.5 லட்சம் செலுத்தப்பட்டது.அத்துடன் சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு இந்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றச்செயலில் சூத்திரதாரியான பெல்ஜயம் வாழ் நபரை, இன்டர்போலின் உதவியுடன் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.