நாய்ரூபத்தில் வந்த எமன்..!!இளம் குடும்பஸ்தர் மரணம்..!

யாழ் நாவற்குழி செம்மணி வீதியில் முச்சக்கரவண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே சென்றதில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது சிறுவனும் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு வயது ஆண் குழந்தையின் தந்தையான வேலுப்பிள்ளை அமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *