கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவல பகுதியில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (28.02.2024) இரவு இடம் பெற்றுள்ளது. 32 வயதாகிய ஹொரவல, வெலிபன்ன பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பூப்புனித நீராட்டு விழா இல்லத்திற்கு வந்த இரு தரப்பினரிடையே பழைய தகராறு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.அது முற்றிய நிலையில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.