மதுபோதையில் நடந்த கோடாரி தாக்குதல்..!! ஒருவர் பலி..!

மது போதையில் வந்த நபர் ஒருவர் இரு தம்பதியினரை கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது திருகோணமலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவமானது திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றய தினம் இரவு (29.3.2024) இடம்பெற்றுள்ளது.

44 வயதுடைய அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர், படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மனைவி உயிரிழந்துள்ளதுடன், கணவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *