வீட்டில் இருந்து நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-7-5.jpg)
வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நிர்வாணமாக இருந்த நிலையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் சாந்தினி எனும் 63 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.குறித்த பெண் தனது பிள்ளைகள் மற்றும் கணவனை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும்,
நேற்று வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்,சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.