அரசாங்கம் புத்தாண்டு குறித்து பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-8-3.jpg)
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகள்,பட்டாசுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.பண்டிகை நாட்களில் ஏற்படும் பாதிப்புக்களில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் 100% பேர் இன்னும் குணமடையவில்லை என தெரிவித்தார்.மேலும் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் சஜித் ரணதுங்க இலங்கையில் பெரும்பாலான மரணங்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.