சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்..!!ஜனாதிபதி அறிவிப்பு.

அரசாங்க உழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கபோவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை நேற்று பிற்பகல் குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் நடை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது.எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *