பெண் ஒருவருக்காக இரு குழுவிற்கிடையில் வாள்வெட்டு..!

பெண் ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக மில்லனியா பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மில்லனியா, பெல்லந்துடாவ பகுதியில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே வாள்கள் மற்றும் மன்னா உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதோடு மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *