இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்..!!

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதாந்திர எரிபொருள் விலை மதிப்பாய்வுக்கு ஏற்ப இந்த திருத்தம் செய்யப்படலாம்.இதனால் எரிபொருளின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *