குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,அதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோகிராம் அரிசியும், எஞ்சிய 10 கிலோகிராம் அரிசி மே முதல் வாரத்திற்குள் வழங்கப்படும்.இந்த உதவித் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மட்டுமன்றி நெல் விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கும் பயனை வழங்க‌ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *