தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் இணைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-2-6.jpg)
மாணவர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்க்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.2021 மற்றும் 2022 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்ப காலம் வரும் 10ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 5-10 வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.இவ்வாறு விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்ய வேண்டுமாயின் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.