வாகனங்கள் வைத்திருப்போர் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!!

பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் நகரங்களுக்குள் நுழையும் போது, ​​வாகனங்களை கவனமாக ஓட்டுமாறு சாரதிகளை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.தற்போது புறநகர் பகுதிகளில் வாகன‌ திருட்டு கும்பல் நடமாடுவதால், நகரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது வாகனங்களை பூட்டி வைக்குமாறு சாரதிகளை பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தனியார் வாகனங்களை நிறுத்துமாறு, ஓட்டுனர்களை வலியுறுத்தியுள்ளார்.புத்தாண்டுக் காலத்தில் கடைகளின் பாதுகாப்பு தொடர்பில் வர்த்தகர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *