மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி தெரிவித்த முக்கிய தகவல்..!! பயன்பெறும் மக்கள்..!

பெருந்தோட்ட மக்களுக்கு கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்,

இதன் அடிப்படையிலேயே அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது, பிரிந்தால் நாட்டில் முன்னேற்றத்தை காண முடியாது, கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.