வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் குறித்து முக்கிய அறிவிப்பு..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-4-15.jpg)
தற்போது நிலவி வரும் வெப்பநிலை காரணமாக தெரு நாய்கள், வீட்டு செல்லப்பிராணிகள் அத்தோடு வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.அதிக வெப்பம் காரணமாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிக வெப்பம் நிலவும் போது 20 நிமிடங்களுக்கு அதிகமாக பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள விலங்குகள் வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகின்றன, எனவே அவற்றிற்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழையும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.