பொலிஸாரிடம் சிக்கிய காதல் ஜோடி..!! காதலன் தப்பியோட்டம்..காதலி கைது..!

மோட்டார் சைக்கிளில் தனது காதலனுடன் விற்பனை செய்ய போதைப்பொருளை எடுத்துக்கொண்டு சென்ற போது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் காதலியை விட்டு தப்பியோடிவிட்டதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.27 வயதுடைய விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த பெண்ணும் அவரது காதலனும் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தும்மலசூரிய விலத்தாவ வீதியில் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சோதனையிட்டபோதே அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான காதலனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *