நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை இந்தியாவில் ஆரம்பம்..!!

நேற்றய தினம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த தொடருந்து சேவையானது கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் முன்னேடுக்கப்படவுள்ளது. குறிப்பாக நீருக்கடியில் மெட்ரோ ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று நிலத்தடியில் உள்ளன.

 

இந்த சேவையானது 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ 520 மீ ஆற்றை வெறும் 45 வினாடிகளில் கடந்து செல்கிறது, இது விரைவான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை உறுதியளிக்கிறது.இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *