காதலர் தினத்தன்று காதலால் நடந்த சோகம்..!!பரிதாபமாக இளைஞன் உயிரிழப்பு..!

21 வயதாகிய இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து இரத்தினப்புரி இறக்குவானை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது காதலர் தினமான நேற்று இடம்பெற்றுள்ளது.தனது காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் குறித்த இளைஞன் தவறான முடிவை எடுத்துள்ளார். இறக்குவானையைச் சேர்ந்த‌ 21 வயதுடைய இளைஞனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாட்டிலும் அவரது தந்தை கொழும்பிலும் பணிபுரிந்து வருகின்றனர் மேலும் குறித்த இளைஞர் தனது இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இளைஞனின் திடீர் மரணம் தொடர்பில் அவரது உறவினர்கள் திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.அதாவது, குறித்த இளைஞன் யுவதி ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் கதைத்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *