மீண்டும் முகக் கவசம் அணிய வேண்டும்..!! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டின் மிக வெப்பமான காலநிலையானது சுவாசப் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இன்னும் அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இதன் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கேதர தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்தால் உருவாகும் தூசி சுவாச பிரச்சினைகள் ஏற்படுத்தும்.இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.எனவே, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *