மாயமான மீனவர்கள் மீட்பு..!!இரண்டு இரவுகள் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு..!

கடந்த (6/03/2024)அன்று கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்று காணமல் போன இயந்திர படகு மற்றும் அதில் பயணம செய்த மீனவர்கள் மூவரும் நேற்றய தினம் (8/03/2024) பாதுகாப்புடன் கரை திரும்பியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மூவருடன் கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் 6 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் இயந்திர படகுடன் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்களும் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இயந்திரக் கோளாறு காரணமாக மோட்டார் படகு வேலை செய்வதை நிறுத்தியதாகவும், பின்னர் கடலில் மிதக்க ஆரம்பித்து இந்திய கடல் எல்லையோரம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.குறித்த மூன்று மீனவர்களும் உணவு, குடிநீர் இன்றி இரண்டு இரவுகளை கடலில் கழித்துள்ளதாகவும், இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *