தேசிய அடையாள அட்டையில் வரப்போகும் புதிய மாற்றம்..!!

தற்போதுள்ள அடையாள அட்டையில் உள்ள பார்கோடு அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கீயூ. ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு நிதிப்பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.எனினும், நாடு முழுவதும் மக்களுக்காக பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.