வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஒருவர் அதிரடி கைது..!!சோதனையில் சிக்கிய பொருள்..!

பொலிஸாரால் நேற்றய தினம் (25.04.2024) வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக முன்னெடுத்த திடீர் சோதனையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன்,

அது விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *