O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் வீடு திரும்பிய பின்னர் தூக்கிட்டு தற்கொலை..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-3-5.jpg)
க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 வயதுடைய கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பகுதியை சேர்ந்த மாணவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.முதல் நாள் பரீட்சையை எதிர்கொண்டு வீடு திரும்பிய மாணவன் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.