இலங்கையில் தொலைபேசி மூலம் ஏற்படும் மோசடி..!! மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

தாங்கள் பொலிஸார்கள் என கூறி வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பணம் கேட்டு ஏமாற்றுவதாக‌ சில மோசடி கும்பல்கள் ஈடுபட்டுவருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றன்ர்.இதேவேளை, முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறி அழைப்பேற்படுத்தும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் ஒரு போதும் கைதுசெய்யப்படும் நபர்கள் தொடர்பில் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி கூறுவதில்லை.எனவே, இவ்வாறான அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *