உயிர்த்த ஞாயிறு தினம் குறித்து மக்களிடம் பொலிஸார் கோரிக்கை..!!

பொலிஸார் மக்களிடம் தேவாலயங்களுக்கு அடையாளம் தெரியத நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.தற்போது தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் கத்தோலிக்க தேவாலயங்களிலும் பல ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *