எதிர் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து ஜனாதிபதி அறிவிப்பு..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-5.jpg)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.நேற்று வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தீர்வு முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு தான் பிரதமராக இருந்த போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடி நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் இவ்வருடம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.