தூக்கத்தால் 3 ஆவது இடத்திற்கு வந்த இலங்கை..!!

உலகளவில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை 3வது இடத்தைபிடித்துள்ளது.இதன்படி, இலங்கையில் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் தூங்குகிறார்கள் என தெரிய வந்துள்ளது.உலகில் உள்ள 60 நாடுகளில் உள்ள மக்கள் தூங்கும் சராசரி அளவை அடிப்படையாகக் கொண்டு,

உலகில் எந்த நாட்டில் ஒரு இரவில் அதிக நேரம் தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.அதேவேளை, ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரத்தில் மக்கள் அதிகம் உறங்குகிறார்கள் என்பதை கண்டறிய ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பல்கேரியா (Bulgaria), அங்கோலா (Angola) மற்றும் இலங்கை (Sri lanka) ஆகிய நாடுகள் உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது.உலகில் கடுமையாக உழைக்கும் நாடுகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 8வது இடத்தில் இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *