வடமாகாணத்தில் உருவாகிய திடீர் கோடீஸ்வரர்..!! சொத்துக்கள் முடக்கல்..காரணம் என்ன..?
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/05/fb-post-5-1.jpg)
சட்டவிரோதமான 09 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மன்னாரில் முடக்கப்பட்டுள்ளது.43 வயதுடைய மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவரின் சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு மர்றும் தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பவை நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2002ஆம் ஆண்டு அரசாங்க வீட்டுத்திட்டத்தைப் பெற்று, கடலோடியாக இரண்டு படகுகளுடன் சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் திடீரென பல கோடி ரூபா சொத்துக்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யுக்திய நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் இவ்வாறு சொத்துக்கள் முடக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.