வாய்த்தகராறில் ஏற்ப்பட்டு ஆயுதத்தில் முடிந்த மோதல்..!காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!!

நேற்று இரவு(19.02.2024) இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட மோதலில் ஐந்து பேர் கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.இவ் மோதலில் இரு ஆண்களும் மூன்று பெண்களும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தகாத உறவினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.காயமடைந்தவர்கள் 28 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் 24, 33 மற்றும் 59 வயதுகளையுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *