நாற்காலியில் சடலமாக இருந்த பெண்..!!குழப்பத்தில் காவல்துறை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-2-11.jpg)
தனியாக வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த மரணமானது அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 65 வயதுடைய பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண் சில நாட்களாக காணவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை (19) பொலிசார் வந்த போது, வீட்டில் இருந்த நாற்காலியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சிதைந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.