12 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி..!!குற்றவாளிக்கு மரண தண்டனை..!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/02/accont-3-11.jpg)
இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று (19) கொட்டகெத்தன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது பன்னிரண்டு வருடங்களின் பின்னர் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.