கட்டு நாயக்கா விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்ட மரணம்..!! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் கிடைத்த அதிர்ச்ச்சி தகவல்..!

இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த நபருக்கு விமான நிலையத்தில் திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *