உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மரணம்..!

குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று தலைமன்னார் – செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் ரொனால்ட் ரீகன் எனும் 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் பெய்த கனமழையால், மேற்படி கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடந்த‌ (26 டிசம்பர் 2023) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டில் வேலைகளை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.உறக்கத்திற்கு சென்ற நிலையில் நேற்று காலை (28.12.2023) குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் அவரைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​மழை வெள்ளத்தில் அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் உடனடியாக உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் உறவினர்களுக்கு அறிவித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் மற்று தடவியல் பொலிஸார் அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர் தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையிலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *